ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இருப்பதை மட்டும் உணர்கிறேன்

அங்கும் இங்கும் என்று
நகம் கடித்து கொண்டு
உன் வருகைக்காக காத்து
இருந்தேன் .....................
கடந்து செல்லும் நினைவலைகளுடன்
கடக்க முயலும் உன் புன்முறுவலுடன்
இறுதி வரை நீ வரவில்லை
முகில்களுடன் தேடினேன்,நீ
இருப்பதை மட்டும் உணர்கிறேன்
அமாவாசை என்று உணராமல்............

சனி, 10 செப்டம்பர், 2011

சிறகு

தவழும் மனதிற்கு பறக்க
சிறகாய் நீ வலம் வந்தாய்
எட்டி பிடிக்க நான் கற்றேன்
நீயோ உயர பறந்தாய் 
மீண்டும் பிடிக்க நான் குதித்தேன்
நின்று கொண்டு, நீ சிரிப்புடனே
மீண்டும் பறந்தாய் உயரமாக 
முடிவில் நான் கற்றேன் 
பிடிக்க முடியாதது உன்னையல்ல 
என் மனதை என்று..............................