ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

பாதச்சுவடுகளுடன்

நானும் தேடிச் சென்றேன்
நினைவிருக்கும் வரை ,
மறை முகம் காட்டும்
பிறை நிலவின் ஒளியில்,
பாதச் சுவடுகள் வழிகொண்டு
கடற்கரை சாலையில் ,
வண்ணத்தின் கலவைகள்
ஒருங்கிணைந்த அலையோசை
நீக்கமற நிறைந்திருக்கும் இருள் வெளியில்
நான் மட்டும் பயணிக்கிறேன் விடியலை
நோக்கி தனியாக, பாதச்சுவடுகளுடன்

1 கருத்து:

  1. வண்ணத்தின் கலவைகள்
    ஒருங்கிணைந்த அலையோசை
    நீக்கமற நிறைந்திருக்கும் இருள் வெளியில்
    நான் மட்டும் பயணிக்கிறேன் விடியலை
    நோக்கி தனியாக, பாதச்சுவடுகளுடன்//

    கருத்துகள் நிறைந்த அழகான வரிகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்