குறிப்பு : என் கருத்துகள் யாரையேனும் புண்படுத்துவது போல்
இருந்தால் மன்னிக்கவும்....நிறைகுறைகளை தயவுசெய்து
கூறுங்கள் ஏனெனில் நான் உங்களில் ஒருவன்
புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல
புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல
நான் உண்மையைத் தேடும் ஒரு சாமானியன் மட்டுமே
ஆம் நான் உண்மையைத் தேடும் உங்களில் ஒருவன்
நாம் நமக்குள்ளே எழுப்பும் கேள்வி மனிதன் மட்டும் மற்ற உயிரினங்களிடம் இருந்து முரண்பட்டு வாழ்கிறான். தவறு செய்கிறான் (அ) பாவம் செய்கிறான் ஆனால் இன்றுவரை அழிவு மனிதனுக்கு வரவில்லை எனும் போது ஆத்திகத்தில் கடவுள் காப்பார் என்றும்,நாத்திகத்தில் அறிவியல் வழியிலும் விளக்கம் கொடுத்தாலும் முழுவதுமாக இரண்டிலும் தீர்வு இல்லை எனவே விவாதம் பிறக்கிறது
இங்கு என்ன செய்வது ஒன்றும் இல்லை இப்படி பார்ப்போம் நம் கூட இருப்பவர் தனியாக பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம் கேட்டால் அவர் தன் நண்பனிடம் பேசுவதாகவும் அவருடன் உணவருந்துகிறார் , தூங்குகிறார் என்றும் சொன்னால் அதையும் தாண்டி இதோ உங்களிடமும் பேசுகிறார் வணக்கம் சொல்லுங்கள் என்றால் ஆத்திகன்,நாத்திகன் என்று யாராக இருந்தாலும் அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று விலகி ஓடுவோம்
ஆனால் இதயே மதம்,கடவுள்,நாத்திகம் என்று சொன்னால் ஒரு கூட்டம் கூடி விவாதம் அல்லதுசண்டை ஆரம்பிக்கிறோம் மேலே சொன்னது போல இங்கேயும் அதேகூத்துதான் நடக்கிறதுஆனால் அப்படியே தலைகீழாக நடக்கிறது.இதற்கு விடை நாம் நம் படிப்பை,அனுபவத்தை பெருமையாக அல்லது தகுதியாக காட்டுவது இவற்றிற்கு சரி. மதம்,கடவுள்,நாத்திகம் இவற்றை பெருமையாக அல்லது தகுதியாக காட்டுவது இல்லையென்றால் அவர்களை வேற்றுகிரக ஜந்துக்களை போல் பார்ப்பது
எதற்கு இந்த முட்டாள்தனம்
தனது சுயலாபத்திற்காக எதையும் செய்ய துடிக்கும் மனிதனின் அறிவின்மையையே காட்டுகிறது.எந்த பிரச்சனை என்றாலும் மதம்,கடவுள்,நாத்திகம் இதனுள் கொண்டு வருவது.
நமக்கு சளி பிடிக்கிறது இதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை இதே சளி உயிரை கொல்கிறது என்றால் இங்கே ஆத்திகம்,நாத்திகம் உருவாகும் .ஒரு கிறுமி தன் வாழ்வாதாரதிறக்காக நம்மை கொல்கிறது இதில் என்ன ஆத்திகம்,
நாத்திகம் பேசுவது வேடிக்கையாக உள்ளது
பிளாக் மாரியம்மன் கோவில் அடடே அப்படியென்றால் பிளேக் கிருமிக்கு வேலை இல்லையா பிளாக் கிருமிக்கு எங்கே போவது. நான் நாத்திகன் கோவிலுக்குள் போகமாட்டேன் என்பது கடவுள் இல்லையாம் பின்ன என்ன கோவிலுக்குள் போக வேண்டியதுதானே
(சிலர் நாத்திகவாதிகள் என்று இப்படி செய்வதை நான் பார்திருக்கிறேன்) அவர்களை என்ன சொல்வது நாத்திகம் மதம் அல்ல ஒரு விழிபுணர்வு ஆயதமே புரிந்து கொள்ளுங்கள்....
உண்மையை தேடாமல் இப்படி தனக்குள் ஒரு வட்டம் போட்டு ஆத்திகம்,நாத்திகம்
பேசுபவர்களை என்ன செய்வது?????????????????????
உண்மைக்கான தேடலை தொடர்வோம்.............மீண்டும் சந்திப்போம்................