சனி, 4 ஜூன், 2011

இருக்கும் வரை







இருக்கும் வரை இருப்பேன்


இல்லாவிட்டலும் இருப்பேன்


எவற்றையும் கடப்பேன்


எங்கும் நான் செல்வேன்


விரும்பினால் நேசிப்பேன்


இலலை என்றால் சுவாசிப்பேன்


தயக்கத்தை தகர்ப்பேன்


தரணியெங்கும் கொண்டு சேர்ப்பேன்


வானளாவ உயர்வேன் மற்றவர்


உயர என் தோள் கொடுப்பேன்


வாழ்க்கையோடு பயணிப்பேன்


பயணத்தில் நான் பயணியாவேன்


மாற்றங்களுக்கு மாற்றாவேன்


மாற்றமே என் மா உயர்வாவேன்


ஏற்றத்தில் நான் சீரமைப்பேன்


ஏற எங்கும் ஏற்றமாவேன்


என்றும் எதிலும் இருப்பேன்


நான் நானாக, உனக்காக....................


                                            இப்படிக்கு,


                                                      தன்னம்பிக்கை.











2 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்