வியாழன், 23 ஜூன், 2011

கற்றுக்கொண்டிருப்பவன் (கவிதை)

கருத்துகளில் இனிமை
எழுத்துக்களில் வளமை
தேடுதலில் புலமை
கற்றுக்கொள்வதில் பொறுமை
எடுத்துரைப்பதில் வலிமை
தட்டிக்கொடுப்பதில் மென்மை
பாராட்டுவதில் வள்ளல்தன்மை
கண்டிப்பதில் நடு நிலைமை
வழிகாட்டுவதில் அனுபவத்தன்மை


இவையணைத்தையும் நான்
கண்டேன் என் சான்றோர்களிடம்
 (இயற்கையின் கொடைகளிடம்)


                                                                இப்படிக்கு


                                                       கற்றுக்கொண்டிருப்பவன்


1 கருத்து:

  1. உங்கள் கவிதையில்
    சொற்கள் செழுமை!
    அதை படிக்கும்போது
    எமக்கு இனிமை!

    அன்பன்
    மகேந்திரன்

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்