புதன், 22 ஜூன், 2011

களவு (காதல் கவிதை)



இப்போதுதான் தெரிந்தது களவு
உண்மைதான் களவு போய்விட்டது
திருட்டு விழிகளை நான் கண்டேன்
அது அங்கும் இங்கும் அலைந்தது
என்னை பார்த்து சிரித்தது கபடமில்லாமல்
எனக்கு கோபம் வரவில்லை ஆச்சரியம்
திருட்டு ஆனால் கபடமில்லா சிரிப்பு
என்ன இது புது உலக சரித்திரம்
ஆனால் நான் எதையும் இழக்கவில்லை
அப்படியானால் களவு நடந்ததே
என் மனதுக்கு இன்னமும் புரியவில்லை
எப்படி புரியும் அவள் திருடியது என் மனதை
வைத்து சென்று விட்டால் அவள் மனதை
ஒரு களவு தேவதையாய் என் துடிப்பை இரசிக்க




2 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்