செவ்வாய், 14 ஜூன், 2011

ஜன்னலோரக் கவிதை

அழகாய் இரண்டு சிறிய கதவுகள்
அவளின் சிரிக்கும் கண்கள் போல்
அதில் இருக்கும் வண்ண ஓவியங்கள்
அவள் விழி ஆடும் அழகு நடனம் போல்
ஒன்றாய் பார்த்தால் அவள் மலர்முகம்
தனியாய் பார்த்தால் அவள் வெட்கம்
சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
ஜன்னல் திறந்து தென்றல் வந்தது
ஆனாசயமாய் தாவி என் மார்பில் விழுந்தாள்
கன்னத்தில் வருடி மெய் மறந்தாள்
ஆம் அவள்தான் என் பூனைக்குட்டி
என்றும் அவள் என் செல்லக்குட்டி


1 கருத்து:

  1. என் பூனைக்குட்டி
    என்றும் அவள் என் செல்லக்குட்டி//

    செல்லக்குட்டி பூனைக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்